கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 30.6.2024

1 Min Read

30.6.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

< நாடாளுமன்றத்தில் நீட் எதிர்ப்பை அடுத்து அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா கூட்டணி முடிவு.

< டில்லியை தொடர்ந்து குஜராத்தில் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து!
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

< பீகார் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி நிலை அல்லது நிதி கோருகிறது என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம்.

< மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ஒழித்தால், தெலங்கானா மாநில மாணவர்களுக்கு 900 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என சட்ட நிபுணர்கள் கருத்து.

< தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப் பேரவையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்ற முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:

< பிரிவினைவாத, வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தேர்தல் முடிவால் தெரிகிறது. ஆனால் எதுவுமே நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார் என சோனியா காந்தி தாக்கு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

< நீட் தேர்வுத் தாள் கசிவு விசாரணை: ஜார்கண்டில் இருந்து பத்திரிகையாளரை கைது செய்த சிபிஅய், குஜராத்தில் 4 மாவட்டங்களில் 7 இடங்களில் சோதனை

தி இந்து:

< ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு பாஜக அழிந்துவிடும் என பிணையில் வெளிவந்துள்ள ஜார்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உறுதி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *