மகளிர் – குழந்தைகளுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

1 Min Read

சென்னை, ஜூன்29- கோடக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் புதிதாக ‘கோடக் ஜென்2ஜென் புரொடெக்ட்’ எனும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது. காப் பீட்டுத் துறையில் முதல் முறையாக இரண்டு தலை முறையினரைக் காக்கும் வகையில் இது அறிமுகம் செய்யப்படுகிறது. ஒரே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உங்கள் வாரிசுகளுக்கும் காப்பீட்டு வசதி கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைந்த கவரேஜ், அதாவது உடல்நலன் சார்ந்த சலுகைகள் மற்றும் பயனாளிகள் விபத்துக் காப்பீட்டுச் சலுகை, நிரந்தர ஊனத்துக்கான சலுகை மற்றும் தீரா நோய் உள்ளிட்ட சலுகை களைப் பெறலாம். பெண் காப்பீட்டுதாரருக்கு கூடுத லாக ‘கோடக் ஜென்2ஜென் புரொடெக்ட்’ காப்பீட்டுத் திட்டத்தில் 5% விபத்து சலுகை அளிக்கப்படும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் குறித்து இந் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மகேஷ் பால சுப்ரமணியன் கூறுகையில், “வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் மீறிய காப்பீட்டுத் திட்டங்களை மிகுந்த பொறுப்புடன் வடிவமைப் பதில் எங்கள் நிறுவனம் அக்கறை செலுத்துகிறது. இக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே திட்டத்தில் இரண்டு தலைமுறையினருக்கான காப்பீட்டு வசதிகளைப் பெற முடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *