பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 29- தமிழ்நாட்டில் உள்ள பிரதான பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் எனவும் பணி, கல்வி நிமித்தமாக நள்ளிரவு நேரங்களில் பேருந்து, ரயில் நிலையம் வரும் பெண்களுக்கு தங்குவதற்கு பாதுகாப்புடன் கூடிய விடுதிகளை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி பெண் வழக்குரைஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் கூட்டாக பொதுநல வழக்கு தொடர்ந் திருந்தனர். இந்த வழக்கு பொறுப்பு தலைமை

நீதிபதி

ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (28.6.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜ ராகி, பெண்கள் பாதுகாப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக் கைகளை பட்டியலிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பணம் செலவு செய்து பல திட்டங்களை செயல்படுத்தும் அரசை பாராட்டுகிறோம். ஆனால், இதுகுறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு பிளீடர், உரிய வகையில் விளம்பரப்படுத்தப்படும் என்று பதிலளித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கனிமொழி மதி, திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய விரும்புவதாக கூறினார். இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *