தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 29 தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப் பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிற் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று (28.6.2024) பதிலளித்து பேசியதாவது:
கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம்வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தேவையான நிலங்களை எடுத்துக் கொடுத்தால் அந்த பகுதிகளில் சிப்காட் அமைத்து தரப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் கடந்த ஜனவரி 7, 8-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இதுவரை 379 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

இதுதவிர பொருளாதாரம் சமச்சீரான வளர்ச்சியை பெறுவ தற்காக தென் மாநிலங்கள், டெல்டா, மேற்கு மண்டலங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், துாத்துக்குடியில் மின்வாகன தொழிற்சாலையும், டெல்டா பகுதிகளில் 300 ஏக்கரில் ரூ.161 கோடியில் புதிய சிப்காட் அமைக்கப்பட உள்ளது.
ஓசூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பது தொடர்பாகமுதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை கூறு கின்றனர். ஆனால், புதிய விமான நிலையம் கண்டிப்பாக அமைக்கப்படும். இதன்மூலம் வடமேற்கு மாவட்டங்களில் தொழில் வளம் பெருகும்.

இதுதவிர ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்கிறார். இந்தபய ணத்துக்கு பிறகு அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளன.தமிழ்நாடு அரசின் ‘வலிமை’ சிமென்ட் வந்ததை அடுத்து தனியார் சிமென்ட் விலை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதற்கி டையே அமைச்சர் பேசும்போது, மாநிலத்துக்கு வருவாய்ஈட்டி தரும் தனது துறைக்குநிதி குறைக்கப் பட்டதாக கவலை தெரிவித்தார்.

தமிழ்நாடு

இண்டியன் பீனல் கோடு (அய்பிசி), கிரிமினல் ப்ரோசிஜர் கோடு, இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் என ஆங்கிலத்தில் இருந்த இந்த சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்திருப்பதைக் கண்டித்தும், இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கம், சமத்துவ வழக்குரைஞர்கள் சட்டம், ஜனநாயக வழக்குரைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பாக நேற்று (28.6.2024) பிற்பகலில் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *