கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

29.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது.
* டில்லி விமான மேற்கூரை விழுந்து ஒருவர் சாவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.அய். கைது செய்துள்ளது
* நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு. எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது ஒலிவாங்கி அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி
* ராகுல், தனது குடும்ப பின்னணி பற்றி கூறாமல், மக்களை சந்தித்து தலைவராகி உள்ளார் என்கிறது தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசாவில் பிஜேபி ஆட்சியில் இருந்து வெளியேற்றப் பட்ட பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எதிர்க்கட்சி வரிசை யில் சேர்ந்து மாநிலங்களவையில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
* நீட்-யுஜி கசிவு வழக்கில் ஜார்க்கண்ட் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சிபிஅய் கைது செய்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட உள்கட்டமைப்பு இடிந்து விழுந்தது. பருவமழைக்கு முந்தைய மழையைத் தொடர்ந்து தெருக்களில் வெள்ளம்
தி டெலிகிராப்:
*2024 தேர்தல் முடிவுகளில் பாடம் கற்று, பிரதமர் மோடி பிறர் பேசுவதையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்கிறார் டி.எம்.கிருஷ்ணா.
* அரித்துவாரில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்த உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் பாஜக தலைவர் ஆதித்ய ராஜ் சைனி மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவர்.
– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *