லல்லண்டோப் என்ற பெயரில் சமூகவலைதள பத்திரிகை நடத்தும் சவுரப் திரிவேதி கிட்டத்தட்ட அனைத்து முன்னணி அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்களை அழைத்து பேட்டி எடுப்பார்.
சுமார் 8 ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து செய்துவருகிறார். இவர் மறைமுக வலதுசாரி ஆதர வாளர். இதை அவர் நேரடியாக ஒப்புக்கொள்ளாமல் நடுநிலை என்றே கூறிக்கொள்வார். இவர் பேட்டி எடுக்கும் போது தனது குழு ஊடகவியலாளர்கள் அனைவரையும் அழைத்து வைத்து அவர்களையும் கேள்வி கேட்க வைப்பார்.
தேர்தல் முடிந்த பிறகு நாட்டு நடப்பு குறித்து பேசுவதற்கு பிரபல ஹிந்தி நடிகர் நானாபடேகரை அழைத்தார். ஹிந்தி, மராட்டி திரைப்படங்களில் பகுத்தறிவு குறித்து பேசும் ஒரே நடிகர் என்ற பெருமையைப் பெற்றவர் நானா படேகர்.
இந்தப்பேட்டியின் போது தன்னுடைய குழுவை அறி முகப்படுத்திய போது தற்செயலாக நானாபடேகர், ‘‘இதில் இஸ்லாமியர் யாருமில்லையா?” என்று கேட்டார். சிறிது அதிர்ச்சி அடைந்த சவுரப் திரிவேதி ஒரு கேமிராமேன் அஷ்ரப் – அவர் அங்கே உள்ளார் என்று தயக்கத்தோடு தொலைவில் ஒரு காமிராவிற்குப் பின் இருந்த பகுதியில் கை காட்டினார்.
அடுத்து கேள்வியை நானாபடேகர் கேட்டார், ‘‘எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. அவர்களும் பின்னாலா?’’ என்று கேட்டார். அரங்கம் முழு வதும் அமைதி.. இருப்பினும் அவர் சூழலைப் புரிந்துகொண்டு பேட்டி யைத் தொடரலாம் என்று கூறினார்.
வலது சாரி ஆதரவாளர்கள் அதுவும் ‘‘திரிவேதிகள்‘‘ எப்படி இருப்பார்கள் என்பது புரிகிறதா?