மதுரை சே. முனியசாமியின் ‘‘விறகு வண்டி முதல்… விமானம் வரை’’ புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டு பாராட்டினார்

1 Min Read

மதுரை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே. முனியசாமி அவர்களின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பங்கேற்று முனியசாமி – தனபாக்கியம் இணையருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். முனியசாமி தனது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து ‘விறகு வண்டி முதல்… விமானம் வரை’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதனை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம், மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டார்கள். (மதுரை, 27.6.2024)

கழகம்

மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், சே. முனியசாமி, வே. செல்வம், அ.முருகானந்தம், சுப. முருகானந்தம், தே. எடிசன் ராஜா, இரா.லீ. சுரேஷ், வா. நேரு, பெரியார்பித்தன், சிவானந்தம், எரிமலை, ராக்கு தங்கம், முருகேசன், போட்டோ ராதா மற்றும் தோழர்கள் வரவேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *