குடந்தை தோழர் கு.கவுதமன் மறைவுக்கு இரங்கல்

1 Min Read

அரசியல்

கும்பகோணம் மாநகர திராவிடர் கழகத்தினுடைய தலைவரும், மேனாள் குடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமான  

கு. கவுதமன்  (வயது 68) 24-8-2023 அன்று இரவு 1.30 மணி அளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

சோழபுரம் பகுதியில் அவரது தந்தை குமாரசாமி அவர்களுக்குப் பின், நீண்ட நாட்களாக இயக்கப் பணிகளை அவரது.    குடும்பத்தோடு இணைந்து செய்து வந்தார்  கவுதமன். மானமிகு குமாரசாமி அவர்கள் ‘முரளீஸ் கபே’ போராட்டம் உள்பட பல போராட்டங் களிலும் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.

 தொடர்ந்து இடை இடையே சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையிலும் இயக்கம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர் மானமிகு கு.கவுதமன்.

மறைந்த கு. கவுதமனின் மனைவி வசந்தி.  மகள்கள் – அருள்மொழி, மலர்க்கொடி ஆகியோராவர். அவரது விழிகள் அரவிந்த் கண் மருத்துவமனைக்குக் கொடை யளிக்கப்பட்டன.

குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
25.8.2023

குறிப்பு: திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்  தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் உள்ளிட்ட தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் திரளாகச் சென்று இறுதி மரியாதை செலுத்துவார்கள். தொடர்புக்கு: 9952576131

  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *