இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மனநல சேவை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூன் 28– இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மனநலசேவை வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பொது மறுவாழ்வுத் துறையின் அறிவிப்புகளை அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 26.6.2024 அன்று வெளியிட்டார். அதில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து மண்டபம் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் புதிதாக அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டமானது நெடுஞ்சாலைகள் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மேம்படுத்தப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மரம் நடுதல், நாற்றங்கால் அமைத்தல், வீட்டு தோட்டங்கள் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல். காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 103 மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் மனநல மேம்பாட்டை நோக்க மாக கொண்டு, மனநல சேவைகள் வழங்கும் திட்டம் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் என அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *