ஏர்வாடிக்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க கலந்துரையாடலில் முடிவு

Viduthalai
1 Min Read

ஏர்வாடி, ஜூன் 27 23.6.2024 அன்று இரவு ஏழு மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அயூப்கான் அலுவல கத்தில் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் கலந்துறவாடல் கூட்டம் நடை பெற்றது. 5.7.2024 அன்று ஏர்வாடிக்கு வருகைதரும் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
பெருந்திரளாக மக்கள் பங்கு பெறும் வகையில் கூட்டத்தை ஏற்பாடு செய்வோம் என களக்காடு ஒன்றிய திமுக செயலாளர் கே.செல்வகருணாநிதி, நகர திமுக செயலாளர் அயூப் கான் ஆகியோர் உற்சாகமாக தெரிவித்தார்கள். அனைவருக்கும் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் வள்ளியூர் ந.குணசீலன் நன்றி கூறினார்.
கலந்துரையாடலில் மாநில, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *