திருச்சி, ஜூன் 27 பன்னாட்டு போதை ஒழிப்பு நாளினை (26.06.2024) முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஒருங்கிணைந்த குடிபோதை மாற்று மறுவாழ்வு மய்யம் காஜாமலை மகளிர் மன்றம் நடத்திய விழிப்புணர்வுப் பேரணியில்பெ ரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 1000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்து சிறப்பித்த இப்பேரணி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் துவங்கி இரயில் நிலைய சந்திப்பில் நிறைவுற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.