சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (25.6.2024) தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:
தமிழ்நாட்டில் மின் வாகனங்க ளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயா்ந்து வருகிறது.
மின் வாகனங்களை பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், மோட்டாா் வாகன வரியில் இருந்து 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் 2020-2021ஆம் ஆண்டில் 3,009 போக்குவரத்து வாகனங்களும், 8,927 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என 11,936 வாகனங்கள் பதிவு செய்யப்பட் டுள்ளன.
மேலும், 2021-2022ஆம் ஆண்டில் 2,751 போக்குவரத்து வாகனங்களும், 36,866 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என 39,617 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள தோடு, 2022-2023ஆம் ஆண்டில் 2,918 போக்குவரத்து வாகனங்களும், 68,913 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என 71,831 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2023-2024ஆம் ஆண்டில் 7,117 போக்குவரத்து வாகனங்களும், 93,150 போக்குவரத்து அல் லாத வாகனங்களும் என 1,00,327 வாகனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு மே மாதம் வரை 1,147 போக்குவரத்து வாகனங் களும், 14,568 போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என 15,715 வாகனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
மொத்தமாக கடந்த ஐந்தாண் டுகளில் 16942 போக்குவரத்து வாகனங்களும், 2,22,424 போக்கு வரத்து அல்லாத வாகனங்களும் என மொத்தம் 2,39,426 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் மின் வாகனங்களின் அதிகரித்து வருவது தெரிய வருகிறது.
வெளி மாநிலத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டின் 411 பேருந்துகளை ஆந்திர மாநிலத்தில் இயக்க இரு மாநிலங்களுக்கு இடையேயான 3ஆவது பரஸ்பர ஒப்பந்தம் தயா ரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வகையான பரஸ்பர ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட எண் ணிக்கையிலான சரக்கு வாகனங்கள், பயணியர் வாகனங்கள், ஒப்பந்த ஊா்திகள் ஆகியவற்றை இரண்டு மாநிலங்களுக்கு இடையே தடையில் லாமல் இயக்க வழி செய்கிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டின் 411 பேருந்துகளை ஆந்திர மாநிலத்தில் 122 வழித்தடங்களில் இயக்க இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாவது பரஸ்பர ஒப்பந்தத்தின் வரைவை அரசு தயாரித்து வருவதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளால் நிகழும் இறப்பு குறைவு
கடந்த சில ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளால் ஏற்படும் விபத் துகளும் உயிரிழப்புகளும் குறைந் துள்ளதாக போக்குவரத்து துறை கொள்கை விளக்கக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:
கடந்த 2023-2024 நிதியாண்டில் போக்குவரத்து துறையில் மொத்தம் 18,728 பேருந்துகள் இயக்கப்பட்டதில் 878 உயிரிழப்பு விபத்துகள் கண்டறி யப்பட்டன. அதில் 971 போ் உயிரிழந்தனா்.
இது கடந்த ஆண்டை காட்டி லும் 29 உயிரிழப்புகள் குறைவாகப் பதிவாகியுள்ளது. 2022-2023ஆம் ஆண்டில் மொத்தம் 18,723 பேருந்துகள் இயக்கப்பட்டதில் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகளாக 906 கண்டறியப்பட்டன. அதில் ஆயிரம் போ் உயிரிழந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.