வழக்குகளில் விரைவான விசாரணை தேவை அதுதான் சரியான நீதி உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து கருத்து

2 Min Read

சென்னை ஜூன் 27 ‘குற்றவியல் சட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியம்,” என, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து தெரிவித்தார். ஒன்றிய அரசு, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக் ஷா, பாரதிய சாட்சிய அதினியம் என்ற மூன்று புதிய சட்டங்களை இயற்றியுள்ளது.

இதற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.புதிய குற்றவியல் சட்டப்பிரிவுகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அது தொடர்பான பயிலரங்கம், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத் கர் சட்டப் பல்கலை வளாகத்தில், நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி நாகமுத்து பேசியதாவது: இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் காலத்தின் தேவை. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் காலனியாதிக்க காலத்து குற்றவியல் சட்டங்களை, நம் நாட்டின் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய, சரியான புரிதல்கள் இருக்க வேண்டும். இந்த சட்டங்கள் பற்றிய செய்திகள் வெளியிடும்போது, பொறுப்புடனும், கண்ணியத்துடனும் வெளியிட வேண்டும்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் அடையா ளங்களை, செய்திகளில் வெளியிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குற்றச் நிகழ்வுகள் தொடர்பான செய்தியை வெளியிடும் போது, மேம்போக்கான தகவல்களை மட்டும் வைத்து வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.புதிய சட்டங்கள் ஜூலை 1இல் நடைமுறைக்கு வருகின்றன. ஜூன் 30-ஆம் தேதி இரவு வரை பதிவு செய்யப்படும் வழக்குகள்,பழைய குற்றவியல் சட்டங்களின் கீழ்தான் பதிவு செய்யப்படும்.

புதிய சட்டங்களில், மரண தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு, குறிப்பிட்ட கால அளவு மட்டுமே சிறை தண்டனை விதிக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, ஒன்றிய மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் லீனா மீனாட்சி, பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குனர் அருண்குமார், துணை இயக்குனர் திருமதி விஜயலட்சுமி, அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளர் கவுரி ரமேஷ், டீன் பாலாஜி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *