ஏர்வாடியில் தமிழர் தலைவர் பொதுக்கூட்டம் குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் புதிய மாணவர்கள் பங்கேற்பு, ‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு!

Viduthalai
2 Min Read

திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

வள்ளியூர், ஜூன் 26- திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23.6.2024 அன்று வள்ளியூரில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் ச.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக அமைப்பாளர் ந.குணசீலன் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் செயல்திட்ட உரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் செ. சந்திர சேகரன், வள்ளியூர் பகுத்தறி வாளர் கழக செயலாளர் எ.எம் .சத்யன், துணைத் தலைவர் சு.வெள்ளைப்பாண்டி, துணைச் செயலாளர் இ.மோகன்சுந்தர், நெல்லை மாநகர ப.க.துணைச் செயலாளர் சந்திப்பு நடராசன், எஸ்.ஜெகதீஷ் சுகின், பா. பால் வண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரை ஆற்றினார். நகர கழக செய லாளர் பெ. நம்பிராசன் நன்றியுரை கூறினார்.

கூட்டத்தில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு சுயமரி யாதைக்காரர் கலைஞர் நூற் றாண்டு நிறைவுவிழா! திமுக கூட்டணிக்கு வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி பாராட்டு விழாவை 5.7.2024 அன்று ஏர்வாடியில் நடத்துவது எனவும், குற்றாலத்தில் சூலை-4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் புதிய மாணவர்களை பங்கேற்கச் செய்வது எனவும், 11.7.2024 அன்று நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணியில் பங்கேற்று வருகைதரும் மாணவர் கழகம், இளைஞரணி தோழர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து ஏர்வாடி சென்று களக்காடு ஒன்றிய திமுக செயலாளர்செல்வ.கருணாநிதி, ஏர்வாடி பேரூராட்சி திமுக செயலாளர் அயூப்கான் ஆகி யோரை சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் எளிமை மிகுந்த ஆசிரியர் அவர்கள் எங்கள் ஊருக்கு வருவதை பெருமையாக கருதுகிறோம் என தெரிவித்து மகிழ்ந்தார்கள்.

மாவட்ட திமுக துணைச் செயலாளர் நம்பி அவர்களின் ஒருங்கிணைப்பில் களக்காடு ஒன்றியம் ஏர்வாடியில் 5.7.2024 வெள்ளிக்கிழமை மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பொதுக்கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்துவோம் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்த சட்டப்பேரவை சட்டப் பேரவை மேனாள் தலைவரும், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான இரா.ஆவுடையப்பன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து மாவட்டக் கழகம்சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *