பெரியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு துவக்க விழா

viduthalai
1 Min Read

தஞ்சை, ஜூன் 26- வல்லம், பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் 2024-2025ஆம் ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர்க ளின் வகுப்புகள் துவக்க விழா 24.06.2024 அன்று நடைபெற்றது.

இக்கல்லூரியின் முதல் வர் டாக்டர் அ.ஹேமலதா முதலாமாண்டு மாணவர்களிடையே உரை யாற்றும்போது பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் வரலாறு, கல்லூரியின் 44 ஆண்டு கால சாதனைகள் மற்றும் பெருமைமிகு விருதுகளைப் பற்றி கூறினார்.

தமிழ்நாடு

மாணவர்கள் பெற வேண்டிய உயர்ந்த பண் புகளில் முதலிடம் பெறும் ஒழுக்கம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கூறிய அவர் “சிறந்த தொழில்நுட்பக் கல்வி யோடு மாணவர்களின் உடல்நலம் மற்றும் மன நலத்தை வளர்க்க உதவும் விளையாட்டுகள், நாட்டு நலப் பணித்திட்டம் மற் றும் தேசிய மாணவர் படை ஆகியவற்றில் இணைந்து மாணவர்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண் டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகை யில் பெற்றோர்களும், ஆசிரியர்களோடு இணைந்து மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
துணைமுதல்வர் தி.விஜயலெட்சுமி வரவேற்புரையாற்றினார். முதலாமாண்டு துறைத் தலைவர் ப.சாந்தி, முதலாமாண்டு பாடத் திட்டத்தைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் பண்பாடுகள் பற்றி மாணவ ஆலோசகர் எஸ்.மைக்கேல்ராஜ் உரையாற் றினார். வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு பற்றி முதலாமாண்டு பேராசிரியர் ஆர்.அய்யநா தன் உரையாற்றினார். முதலாமாண்டு பேராசி ரியர் கே.நீலாவதி நன்றி யுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *