வேலூர், ஜூன் 26- கோவில் திருவிழாவில் நடந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். அவர்களை காவல்துறை யினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
வேலூர் மாவட்டம் சேர் பாடி கிராமத்தில் பெரிய சேர்பாடி, சின்ன சேர்பாடி கிராம மக்கள் இணைந்து கொட மாத்தம்மன் கோவில் திருவிழாவை நடத்தினர். விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது சின்ன சேர்பாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் சின்ன சேர்பாடியை சேர்ந்தவர்களை சேர்க்கக் கூடாது என ஒரு தரப் பினர் பேசியதாகவும், அதை மீறி சின்ன சேர் பாடிஇளைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இருதரப்பி னரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இருதரப்பினர் மோதல் அப்போது அவர்கள் ஒரு வரை, ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும் நடன நிகழ்ச்சி மேடைமீது ஏறி சண்டை போட்டனர்.
பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் ஆங்காங்கே குழுவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர்.
இதனால் காவல்துறை யினர் லேசான தடியடி நடத்தி அவர்களை அங் கிருந்து கலைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.