பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்களுக்கான கண் பரிசோதனை முகாம்! மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்து பார்வையிட்டார்!

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன்26- பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில் பணி­பு­ரி ­யும் வாகன ஓட்­டு­நர்­க­ளுக்­காக நடை­பெற்ற கண் பரி­சோ­தனை முகா­மினை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்­ துப் பார்­வை­யிட்­டார்.
பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மற்­றும் சங்­கர நேத்­ரா­லயா கண் மருத்­து­வ­ம­னை­யின் சார்­பில், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில் பணி­பு­ரி­யும் வாகன ஓட்­டு­நர்­க­ளுக்­காக நேற்று (25.06.2024) இரா­ய­பு­ரம் மண்­ட­லத்­திற்­குட்­பட்ட மாந­க­ராட்­சிப் பணி­ம­னை­யில் நடை­பெற்ற கண் பரி­சோ­தனை முகா­மினை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்­துப் பார்­வை­யிட்­டார்.

பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யின் அனைத்து வட்­டார அலு­வ­ல­கங்­கள், துறை­கள் மற்­றும் மண்­ட­லங்­க­ளில் பணி­பு­ரி­யும் 744 நிரந்­தர ஓட்­டு­நர்­க­ளுக்­காக இந்த பரி­சோ­தனை முகாம் நடை­பெ­று­கி­றது.
இந்த கண் பரி­சோ­தனை முகா­மா­னது முதற்­கட்­ட­மாக நேற்று (25.6.2024) மற்­றும் இன்று (26.6.2024) இரா­ய­பு­ரம் மண்­ட­லத்­தில் உள்ள மாந­க­ராட்­சிப் பணி­ம­னை­யில் நடை­பெ­று­கி­றது. தொடர்ச்­சி­யாக, 2.7.2024, 3.7.2024, 9.7.2024, 10.7.2024 மற்­றும் 19.7.2024 ஆகிய நாட்­க­ளில் புதுப்­பேட்டை பணி­ம­னை­யின் பின்­பு­றம் அமைந்­துள்ள சமு­தாய நலக்­கூ­டக் கட்­ட­டத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *