பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் 17.08.2023 அன்று பெரியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது .இதில் சுமார் 350 பள்ளி மாணவ /மாணவிகள் கலந்துக்கொண்டனர் .எறிபந்து போட்டியில் 14,17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட போட்டிகளில் மூன்று பிரிவுகளிலும் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர் மற்றும் 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தனர் .கைப்பந்து போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடம் பிடித்தனர் மற்றும் 14,19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தனர் .மேலும் முதல் இடம் பிடித்தவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர் .இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ/மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ் ,ரவிசங்கர் ,ரஞ்சனி ஆகியோருக்கு பள்ளி தாளாளர் ,முதல்வர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.