வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழிப் பயிற்சி தமிழ்நாடு அரசு ஏற்பாடு

1 Min Read

சென்னை, ஜூன் 25- செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் உள் ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வண்ணம் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழிகளில் இலவசமாக பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல்முறையாக செவிலியர்க ளுக்கு ஜெர்மன், ஜப்பான் உள் ளிட்ட வெளிநாட்டு மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது. வெளிநாட்டு மொழியை கற்க விரும்பும் செவிலியர்கள் பிஎஸ்சி செவிலியர் அல்லது டிப்ளமா செவிலியர் படிப்பு படித்திருக்க வேண்டும்.

செவிலியர்களின் வசதியை கருத்தில்கொண்டு மொழிப் பயிற்சியானது இணைய வழி வாயிலாகவும், நேரடியாகவும் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும் பும் செவிலியர்கள் முழு விவரங் களையும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 6379179200 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *