மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர்மீது குண்டர் சட்டம் தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றக் கிளை பாராட்டு

2 Min Read

மதுரை, நவ.19 மருத்துவ கழிவுகளை கொட்டு வோர் மீது குண்டர் சட் டத்தில் நடவடிக்கை எடுப் பது தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதி மன்றக்  கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. 

கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ், கேரளாவில் சேகரிக்கப்பட்ட மருத்துவ கழிவுகளை லாரி மூலம் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து ஆலங் குளம் – நெல்லை சாலையில் குருவன்கோட்டை என்ற கிராமத்தில் கொட்டியுள் ளார். சுகாதார ஆய்வாள ரின் புகாரின் பேரில், ராஜேஷ் உள்ளிட்ட சிலர் மீது பயோ மருத்துவ கழிவுகள் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளில் ஆலங் குளம் காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப் பட்ட லாரியை விடுவிக்க ஆலங்குளம் மாஜிஸ்தி ரேட் நீதிமன்றம் உத்தர விட்டது. இதை எதிர்த்து ஆலங்குளம் காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்புமின்றி மருத்துவ கழிவுகள் முறை யாக அழிக்கப்பட வேண் டும். இதை முறைப்படுத் திடும் வகையில் தான் பயோ மருத்துவ கழிவுகள் மேலாண்மை சட்டம் 2016 கொண்டு வரப்பட் டது.

சுத்திகரிக்கப்படாத மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்கவோ, 75 கி.மீ அதிக தொலைவுக்கு கொண்டு செல்லவோ கூடாது. இதை மீறி கொண்டு செல்வது ஆரோக்கியமற்றது. இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்த முடியாது. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கண்காணிப்பு குழுவை அரசு அமைத்துள்ளது. பயோ மருத்துவ கழிவுகள் மேலாண்மை சட்டத்தை மீறுவோர் மீதான குண் டர் சட்ட நடவடிக்கை குறித்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம்.

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் மருத்துவ கழிவுகளை கொண்டு வருவதை தடுத் திடத் தேவையான சட்டத் திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். 45 சிறு வழக்குகளும், 9 வழக்கில் இறுதி அறிக்கை யும் தாக்கல் செய்துள் ளதாகவும், ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

சட்டத்தை மீறுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை மேற் கொள்ள இது தான் சரியான நேரம். லாரியை விடுவித்ததை எதிர்க்கும் இந்த மனு அனுமதிக்கப் படுகிறது. இவ்வாறு உத்தர விட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *