பேராசிரியர் செலையன் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

தருமபுரி ஜூன் 25- தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பயின்று அதே கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் செலையன் 23-6-2024 அன்று காலை 6 மணி அளவில் தருமபுரி இல்லத்தில் மறைவுற்றார்.
அவரது உடலுக்கு மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் க. கதிர் நகர கழக தலைவர் கரு. பாலன், வீ. சிவாஜி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் சாமி, தனராஜ், கவுரவன், ஹரிதாஸ், கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேராசிரியர் செலையன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி, பேராசிரியர் செலையன் வாழ்விணையர் கண்ணகி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

பேராசிரியர் செலையன் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராக பணியாற்றியபோது கல்லூரியில் முத்தமிழ் மன்றம் அமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக பேராசிரியர் அ.இறையன், கு.வெ.கி.ஆசான், சேலம் அ. அருள்மொழி ஆகியோரையெல்லாம் அழைத்து வந்து கல்லூரியில் பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொண்டவர், பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தவர் பேராசிரியர் செலையன் என் பது குறிப்பிடத்தக்கது. அவர் பேராசிரியராக இருந்த காலகட்டத்தில் அவரிடம் படித்த மாணவர்கள் பலரும் பகுத்தறிவாளர்களாக உருவாக்கப் பட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *