கள்ளக்குறிச்சி விவகாரம் மருந்துகள் கையிருப்பு இல்லை என்று கூறுவதா?

1 Min Read

எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டனம்

சென்னை ஜூன் 25 எடப்பாடி பழனிசாமி மருந்துகள் பெயரை மாற்றி கையிருப்பில் இல்லை என்று கூறி மக்களை பதற்றமடையச் செய்வதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; மருந்துகள் இருப்பு பற்றி வெளிப்படைத்தன்மையுடன் இணைய முகப்பில் உள்ளது. பொய்த் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் எடப்பாடி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷச் சாராய விவகாரத்தில் தொடக்க நாள் முதலே சிறப்பாக மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

Fomepizole மருந்து கள்ளக்குறிச்சி, சேலம், சென்னையில் இருப்பில் உள்ளது. தேவை என்றால் சேலம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி பொய்த் தகவலை கூறி வருகிறார்.
தவறான தகவலை பரப்பும் எடப்பாடி, எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகுவதுதான் தார்மீக கடமையாக இருக்கும் அமைச்சர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *