சுரண்டை, ஜூன் 24- சுரண்டையில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கழகக் கொடி ஏற்றி சிறப்புடன் கொண்டாட்டம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டம், சுரண்டை பேருந்து நிலையத்தில் 23.6.2024 அன்று திராவிடர் கழக இலட்சியக் கொடி ஏற்றப்பட்டது.
மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த. வீரன் தலைமையில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் முன்னிலையில் திராவி டர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் எழுச்சி முழக்கத்தோடு கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் சுயமரியாதை வீரர் வே.ஜெயபாலன் கழக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பய னாடை போர்த்தி வர வேற்று சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கே.டி. சி.குருசாமி, மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் முத்து.சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுடலைமுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப் பாளர் சுதன் ராஜா, நகர இளைஞரணி கோமதிநாயகம், வார்டு செயலாளர்கள் பவுல், அருணா, அரிராஜன், மோகன், தர்மராஜ், விசய், கணேசன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
பிறந்தநாள் கண்ட திமுக இளைஞரணி ராசனுக்கு பயனாடை போர்த்தி வாழ்த்து தெரி விக்கப்பட்டது.
செங்கோட்டை ஒன்றி யம் சாம்பவர் வடகரையில் 4.7.2024 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றும் பொதுக் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்வோம் என தெரிவித்து மகிழ்ந்த மாவட்ட தி.மு.க. செயலாளர் வே.ஜெயபாலன் அவர் களுக்குப் பயனாடை போர்த்தி நன்றி தெரிவிக் கப்பட்டது.