கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

24.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
* நீட் தேர்வில் முறைகேடு – சிபிஅய் விசாரணை தொடங்கியது: பாட்னா, கோத்ராவுக்கு தனிப்படை விரைந்தது.
* நீட் – யுஜி தேர்வை முழுவதுமாக ரத்து செய்து, மறுதேர்வு வையுங்கள், தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்; புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு. நீட் தேர்வு மோசடி, தற்காலிக மக்களவைத் தலைவர் பிரச்சினைகளை எழுப்ப இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு.
* கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு: 750 பேர் எழுதவில்லை!
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எரிந்த பேப்பர்களில், ‘அசல்’ நீட் தாளுடன் பொருந்திய 68 கேள்விகளை பீகார் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்; ஒரே மாதிரியான வரிசை எண்கள், மய்யக் குறியீடு பொருந்தியுள்ளது. வினாத்தாள்கள் வருவதற்கு முன்பே கசிவு சாத்தியம் என்கிறார் ஹசாரிபாக் கல்லூரி முதல்வர்.
*பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்தது தேசிய தேர்வு முகமை!
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வயநாட்டு மக்களுக்கு உணர்ச்சிகரமான கடிதம் எழுதிய ராகுல் காந்தி – அவர்களின் நிபந்தனையற்ற அன்பு தன்னைக் காப்பாற்றியது என்று கூறியுள்ளார்.
– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *