பொள்ளாச்சி அ.ரவிச்சந்திரன் – சித்ரா இல்ல இணையேற்பு விழா

1 Min Read

கடந்த 17.6.2024 அன்று பொள்ளாச்சி கழக மாவட்ட செயலாளர் அ.ரவிச்சந்திரன் – சித்ரா ஆகியோரின் மகன்வின்சென்ட் – ஆ.அபிநயா ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு விழா பொள்ளாச்சி ஆர்.என்.எஸ்.மகாலில் காலை 10 மணி அளவில் பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர் பொறியாளர் தி.பரமசிவம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. கழக துணை பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி வாழ்த்துரை வழங்கினார்.

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் , வழக்குரைஞர் அணி மாநில துணை தலைவர் ஆ.பாண்டியன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் மு. ராகுல்,பொள்ளாச்சி மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து, கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர் கோவை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ் ஆறுச்சாமி, கோபி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், தாராபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், தாராபுரம் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன், கோவை மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *