பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 426ஆவது வார நிகழ்வு “சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்ற தலைப்பில் 22-06-2024 அன்று மாலை 07-00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்பில் ஆவடி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எ.கண்ணன் முன்னிலையில் மேனாள் மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.அருமைநாதன் (காங்), ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் அரவிந்தன், சசிகுமார், ரவி, மணி சுமதி, பிச்சை மணி, உதயசூரியா, கெஜலட்சுமி, சதீஷ் குமார், சிகாமணி, ஆரோக்கியசாமி, ஹரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆவடி மாவட்ட கழக மகளிர் அணி தோழர் ஜெயந்தி நன்றி கூறினார்.
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு-பாசறை சார்பில் விளக்கக் கூட்டம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books