தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கப்பட்ட நாகர்கோவில் பெரியார் புத்தக விற்பனை நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. கடந்த மாதங்களில் இந்த புத்தக நிலையத்தில் ரூ.4.0000க்கு இயக்க நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின. கழகத் தோழர்கள் உறுதுணையுடன் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தந்தை பெரியாருடைய நூல்களை பொது மக்களிடம் பரப்பி வருகின்றனர்.