கல்லூரி – பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை: யுஜிசி கூறுகிறது

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 24- நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்து ஏற்கெனவே பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.)தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அதற்கு அனுமதி வழங்கி, அதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளவாறு வரும் 2035ஆம் ஆண்டுக்குள் நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.

அதற்கேற்ப நடப்பு கல்வியாண்டு (2024-2025) முதல் ஜூலை-ஆகஸ்டு மற்றும் ஜனவரி – பிப்ரவரி என ஆண்டுக்கு 2 முறை உயர்கல்வி நிறு வனங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப் படுகிறது.

அதேநேரம் இந்த நடைமுறையை கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பின்பற்றுவது கட்டாயமில்லை. தேவையான ஆசிரியர்கள் உள் பட போதிய உள்கட்டமைப்பு வச திகளை கொண்ட கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுதவிர ஜூலை-ஆகஸ்டு மாதம் நடைபெறும் முதல்கட்ட மாணவர் சேர்க்கையை போன்றே ஜனவரியில் 2ஆம் கட்ட சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இனி இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்காக நடத் தப்படும் ‘கியூட்’ தேர்வு உள்பட பல்வேறு நுழைவுத்தேர்வுகளின் மதிப்பெண்களும் ஓராண்டுக்கு செல்லுபடியாகும்.

அந்த மதிப்பெண்ணையே 2 கட்ட மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திகொள்ளலாம். இத்தகைய செயல்பாடுகள் மாணவர் சேர்க்கையை உயர்த்தவும், அவர்கள் மறுவாய்ப்பு பெறவும், பிற நாட்டு மாணவர்களை ஈர்க்கவும், வெளிநாட்டு பல்கலைக் கழகங் களுடன் இணைந்து செயல்படவும் வழிவகை செய்யும்.

-இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *