சேலத்தில் ஜூலை 15ஆம் தேதி சங்கமம் நீட்டை எதிர்த்து இரு சக்கர வாகன பிரச்சாரம் குறித்து சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

2 Min Read

சேலம், ஜூன் 24- சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி அவர்களின் “பெரியார் இல்ல”த்தில் 23.6.2024 ஞாயிறு காலை 11:30 மணிக்கு நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் அ.ச. இளவழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி. பூபதி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் கி. ஜவகர், தலைமை கழக அமைப்பாளர் கா.நா.பாலு ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாநகர செயலாளர் இராவண பூபதி கடவுள் மறுப்பு கூற, நிகழ்ச்சி தொடங்கியது.
மாவட்டத் தலைவர், மாவட் டச் செயலாளர், மாவட்ட காப்பாளர், தலைமைக் கழக அமைப்பாளர் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினர்.

மகளிர் அணி தோழியர் கமலம், வெ.பூ. கோமதி, தாத காபட்டி பகுதி செயலாளர் ஆர். சீனிவாசன், அம்மாபேட்டை பகுதி தலைவர் குமாரதாசன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ஆர். செல்வக் குமார், அம்மாபேட்டை பகுதி செயலாளர் இமயவரம்பன், சூரமங்கலம் பகுதி செயலாளர் ராஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் அ.இ. தமிழர் தலை வர், சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம் ஆகியோர் உற்சாகத்துடன் தங்கள் ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவித்தனர்.

தீர்மானங்கள்:
ஒன்றிய அரசின் நீட் தேர்வை கண்டித்து தமிழ்நாட்டின் அய்ந்து முனைகளில் இருந்து புறப்படும் இருசக்கர வாகன பிரச்சார பயணம் ஜூலை 11 தொடங்கி- ஜூலை 15இல் சேலத்தில் நிறைவு பெறும். நிகழ்ச்சியை சேலம் மாவட்டத்தில் நடத்திக் கொள்ள அனுமதி அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கூட்டம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இருசக்கர வாகன பிரச்சார சங்கமம் நிகழ்ச்சியை கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாளான 15.7.2024 திங்கள் கிழமை,சேலம் கோட்டை மைதானத்தில் நடத்துவது என இக்கமிட்டி தீர்மானிக்கிறது.
3. சேலம் மாநகர் திராவிடர் கழகச் செயலாளராக இராவண பூபதியையும், தாதகாப் பட்டி பகுதி திராவிடர் கழகச் செயலாளராக ஆர். சீனிவாச னையும் கமிட்டி நியமனம் செய்கிறது. சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
தோழர்களுக்கு “பெரியார் இல்லம்” சார்பாக மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *