சேலம், ஜூன் 24- சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி அவர்களின் “பெரியார் இல்ல”த்தில் 23.6.2024 ஞாயிறு காலை 11:30 மணிக்கு நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் அ.ச. இளவழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி. பூபதி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் கி. ஜவகர், தலைமை கழக அமைப்பாளர் கா.நா.பாலு ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாநகர செயலாளர் இராவண பூபதி கடவுள் மறுப்பு கூற, நிகழ்ச்சி தொடங்கியது.
மாவட்டத் தலைவர், மாவட் டச் செயலாளர், மாவட்ட காப்பாளர், தலைமைக் கழக அமைப்பாளர் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினர்.
மகளிர் அணி தோழியர் கமலம், வெ.பூ. கோமதி, தாத காபட்டி பகுதி செயலாளர் ஆர். சீனிவாசன், அம்மாபேட்டை பகுதி தலைவர் குமாரதாசன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ஆர். செல்வக் குமார், அம்மாபேட்டை பகுதி செயலாளர் இமயவரம்பன், சூரமங்கலம் பகுதி செயலாளர் ராஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் அ.இ. தமிழர் தலை வர், சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம் ஆகியோர் உற்சாகத்துடன் தங்கள் ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவித்தனர்.
தீர்மானங்கள்:
ஒன்றிய அரசின் நீட் தேர்வை கண்டித்து தமிழ்நாட்டின் அய்ந்து முனைகளில் இருந்து புறப்படும் இருசக்கர வாகன பிரச்சார பயணம் ஜூலை 11 தொடங்கி- ஜூலை 15இல் சேலத்தில் நிறைவு பெறும். நிகழ்ச்சியை சேலம் மாவட்டத்தில் நடத்திக் கொள்ள அனுமதி அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கூட்டம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இருசக்கர வாகன பிரச்சார சங்கமம் நிகழ்ச்சியை கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாளான 15.7.2024 திங்கள் கிழமை,சேலம் கோட்டை மைதானத்தில் நடத்துவது என இக்கமிட்டி தீர்மானிக்கிறது.
3. சேலம் மாநகர் திராவிடர் கழகச் செயலாளராக இராவண பூபதியையும், தாதகாப் பட்டி பகுதி திராவிடர் கழகச் செயலாளராக ஆர். சீனிவாச னையும் கமிட்டி நியமனம் செய்கிறது. சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
தோழர்களுக்கு “பெரியார் இல்லம்” சார்பாக மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது.