சென்னை, ஜூன் 23 – கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர் புள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களான உதய சூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது பா.ம.க. உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே நேற்று (22.6.2024) திமுக சட்டமன்ற உறுப்பினர்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்தி கேயன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறிய தாவது:-
உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு எங்களின் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் குடும்பத்தை வைத்து அரசி யல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்புமணி ராமதாஸ். இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென் றும் மலிவான அரசியல் செய்கிறார் அன்பு மணி. எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விலக தயார். அதேபோல் அவர் கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா? சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை. வீட்டில் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கண்ணுக்கு ட்டி திமுக பிரமுகராகி விடுவாரா? மருத்துவர் ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்த தில் ஊழல் புகார் எழுந்தது. அன்றைக்கு சிபிஅய் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சிபிஅய் விசாரணை வேண்டாம் என்று நீதிமன்றத்துக்கு சென்றவர் மருத்துவர் ராமதாஸ்.
இன்றைக்கு, கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டு காவல்து றையினரும் விசாரணையை துவக்கி விட்டனர். இந்த நிலையிலும் சிபிஅய் விசாரணை தான் வேண்டுமென்று வற்புறுத்துவது மருத்துவர் ராம தாசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது” என்றும் குறிப்பிட்டனர்.