கும்பகோணம், ஜூன் 22- கும்பகோணம் பெரியார் மாளிகையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பெரியார் பேசு கிறார் கூட்டம் 15.6.2024 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழக காப்பாளர் வலங்கை வே. கோவிந்தன் தலைமை ஏற்றார். மாவட்ட தொழிலாளர் அணி பொறுப்பாளர் உமையாள்புரம் பெரியார் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாநகர தலைவர் வழக்குரைஞர் பீ. ரமேஷ், மாநகர திராவிடர் கழக செயலாளர் பேராசிரியர் க.சிவகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் திரிபுரசுந்தரி, மாவட்ட துணைத் தலைவர் தமிழ்மணி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
முன்னிலை உரையாற் றிய அனைவரும் இக்கூட் டம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் பற்றி யும், அதில் தங்களது செயல்பாடுகள் பற்றியும் உரையாற்றினார்கள்.
கனரா வங்கியின் மேனாள் மேலாளர் தியாகராஜன் புரட்சிக் கவிஞரைப் பற்றி எழுதிய கருத்துகளை வாசித்தார். அவரது எழுத்துகள், கவிதைகள் பற்றி உலகலாவிய நோக்கில் உரையாற்றியது மிகச்சிறப்பாக இருந்தது.
மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செய லாளர் வி.மோகன், தலை மைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி ஆகியோர் குடந்தையில் மீண்டும் தொடர் கூட் டம் கூட்டப்படுவதன் அவசியம், அதனைத் தொடர்ந்து நடத்திட எடுக்கப்பட்ட நடவடிக் கைகள், கூட்டத்திற்கான புரவலர்கள் செய்ய வேண்டியது பற்றியும், கூட்டம் குறித்த நேரத்துக்கு தொடங்கி குறித்த நேரத்துக்கு முடித்திட வேண்டியது பற்றியும் உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் திருவிடைமருதூர் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இராதகிருட்டிணன் விடுதலை ஓராண்டு, கும்பகோணம் பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் சுவாமிமலை ஞானம் அரையாண்டு விடு தலை சந்தாக்களை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாலர் வி.மோகனிடம், மாவட்ட செயலாளர் கு.நிம்மதி, பீ.இரமேசு ஆகியோரது முன்னிலையில் வழங்கினர்.
புரட்சி கவிஞர் பாரதி தாசன் என்ற தலைப்பில் மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் அமைப்பாளர் பகுத்தறிவு பேராசிரியர் கோபு பழனிவேல் சிறப்புரையாற்றினார். புரட்சிக்கவிஞரின் ஒவ்வொரு நூலினையும் ஓர் ஆய்வு மாணவர் போல் எடுத்துக்காட்டி, மாணவர்களிடம் இன்னும் புரட்சிக்கவிஞரை கொண்டு சென்று சேர்க்க வேன்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து புரட்சிக் கவிஞருக்கும், திராவிட இயக்கத்துக்குமான தொடர்புகள், அவரது புரட்சிகரமான கவிதை களை நயத்துடன் பாடிக் காட்டி கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்தினார்.
முடிவில் கும்பகோணம் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அரங்க. வைரமுடி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பேராசிரியர் ம.சேதுராமன் மிக சிறப்பாக ஒருங் கிணைத்தார். நிகழ்ச்சிக்கு பேராசிரியர்கள், வங்கி அலுவலர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், மகளிர், தமுஎசக பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.
வருகைதந்த அனைவ ருக்கும் சுவையான வடையும், தேனீரும், குடிநீர் பாட்டிலும் வழங்கப்பட்ட்டன.
கூட்டத்திற்கு வருகை புரிந்தோரில் புதிதாக சிலர் புரவலராக இணைந்தார்கள்.