கிருஷ்ணகிரி மாவட்டம், பாலே தோட்டம் வெற்றிச்செல்வன்-சத்தியவாணி முத்து ஆகியோரது மகன் வெ.திராவிடமணி கொண்டம்பட்டி தங்கவேல் – செல்வராணி ஆகியோரது மகள் த.பூங்கோதை ஆகியோரின் மணவிழாவை 21-4-2024 அன்று போச்சம்பள்ளி அம்மன் திருமண மண்டபத்தில் திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட திராவிடர் கழக தலைவர் கோ. திராவிட மணி, மாவட்ட செயலாளர் க. பொன்முடி, தர்மபுரி கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் வண்டி ஆறுமுகம், பகுத்தறிவாளர்கள் கழக பொறுப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊமை. காந்தி மற்றும் தோழர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.