கிருஷ்ணகிரி மாவட்டம், பாலே தோட்டம் வெற்றிச்செல்வன்-சத்தியவாணி முத்து ஆகியோரது மகன் வெ.திராவிடமணி கொண்டம்பட்டி தங்கவேல் – செல்வராணி ஆகியோரது மகள் த.பூங்கோதை ஆகியோரின் மணவிழாவை 21-4-2024 அன்று போச்சம்பள்ளி அம்மன் திருமண மண்டபத்தில் திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட திராவிடர் கழக தலைவர் கோ. திராவிட மணி, மாவட்ட செயலாளர் க. பொன்முடி, தர்மபுரி கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் வண்டி ஆறுமுகம், பகுத்தறிவாளர்கள் கழக பொறுப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊமை. காந்தி மற்றும் தோழர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
பாலே தோட்டம் வெற்றிச்செல்வன்-சத்தியவாணிமுத்து இல்ல மணவிழா
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books