அலோபதிக் மருத்துவக் கல்விக்கு சமஸ் கிருதம் கட்டாயம் என்று பார்ப்பனரல்லாத தலைவர்கள் கூறினாலும், பார்ப்பனர்கள் பல ரும், அரசாணை கிடைக்காததால், அதையே சாக்காக வைத்து மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நிலை எப்பொழுதும் இருந்ததில்லை என்று சாதிக் கின்றனர். ஆனால் சென்னை மருத்துவக் கல்லூரி 1835இல் துவக்கப்பட்டு, 1920 வரை படித்த மருத் துவக் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே என்பதுதான் உண்மை.ஒரு காலக் கட்டத்தில் 184 மாணவர்கள் சேர்க்கப் பட்டனர்.
அதில் ஆங்கிலேயர்கள் 22, இந்திய கிறிஸ்துவர்கள், 2 முஸ்லிம்கள், 73 பார்ப்பனர்கள், 56 பார்ப்பனரல்லாத அனைத்து சமூக மாணவர்கள் (மக்கள் தொகையில் 97 சதவிகிதம்), 1 பார்சி என்று இருந்தனர். சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, 35ஆண்டுகள் மருத்துவக் கல்வி சமஸ்கிருதம் கற்றிருந்த மாணவர்களான பார்ப்பனர்கள் வசம்தான் இருந்தது என்பதே உண்மை! தப்பித் தவறி பார்ப்பனரல்லாத மாண வர்கள் சேர்க்கப்பட்டாலும் அவர்கள் சமஸ்கிருதம் மொழியில் தேர்ச்சிப் பெற்றிருந்தனர் என்பதே உண்மை.(பார்க்க:quora,wttps/www quora.com)