மகாராட்டிரா மாநிலம் மும்பை அய்.அய்.டி-யில் கடந்த மார்ச் 31 அன்று கலாச்சார விழா நடைபெற்றது. இந்த விழா வில் “ராஹோவன்” என்ற தலைப்பில் நாடகம் ஒன்றும் நடத்தப்பட்டது. ராமாயணத்தை அடிப்படை யாகக் கொண்ட இந்த நாடகத்தில் ராமனை தவறாக சித்தரித்ததாகவும், ராமனுக்கு வழங்கப்பட்ட கதாப்பாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் கூறி, நாடகம் நடத்திய 7 மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம் மற்றும் இடைநீக்க நடவடிக்கையை கையிலெடுத்துள்ளது மும்பை அய்.அய்.டி.
ரூ.1.2 லட்சம் அபராத தொகை கிட்டத்தட்ட ஒரு செமஸ்டர் கட்ட ணத்திற்கு சமம் என்ற நிலையில், சில மாணவர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நாட கத்தில் பங்கேற்ற மாணவர் களுக்கு ஜிம்கானா விருதுகளிலி ருந்து எந்த அங்கீகாரத்தையும் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மும்பை அய்.அய்.டி. நிர்வாகம் வழங்கிய ஒழுங்கு நடவடிக்கை தாக்கீதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் பல்வேறு தடைகளை எதிர் கொள்ள நேரிடும் என மும்பை அய்.அய்.டி நிர்வாகம் எச்சரிக்கையை யும் விடுத்துள்ளது.
ராமன் கதாபாத்திரத்தை மய்யப்படுத்தி நாடகம் நடத்திய மாணவர்கள் மீது மும்பை அய்.அய்.டி. நிர்வாகம் கடந்த மே மாதம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும் இந்த விவ காரம் தொடர்பாக கடந்த 2 மாத காலமாக எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. 19.6.2024 அன்று ஒழுங்கு நடவடிக்கை பெற்ற மாணவர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் கூறிய தகவலின் அடிப்படையிலேயே இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தியாக வெளியிட் டுள்ளது. மாணவர்களை மிரட்டி இந்த விவகாரத்தை வெளியே கொண்டு செல்லாமல் அய்அய்டி நிர்வாகம் மூடி மறைத்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
நாடகத்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர் கூறுகையில், ‘‘நாடகமானது ராமாயணத்தின் மாற்றப்பட்ட பாத்திரப் பெயர்கள் மற்றும் கதைக் களத்தின் “பெண்ணிய” மறுவிளக் கம் ஆகும். இந்த நாடகம் தொடர்பாக பார்வையாளர்களும் எதிர்க்க வில்லை, நடுவர்களும் எதிர்க்கவில்லை. பிறகு ஏன் அய்அய்டி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது என்று தெரியவில்லை” என்று கூறினார்.
ராமன் கதாபாத்திரத்தை வைத்து நாடகம் நடத்திய 7 மாணவர் களுக்கு தலா ரூ.1.2 லட்சம் அபராதம் விதித்த மும்பை அய்அய்டி-யின் செயலுக்கு நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது.
அய்.அய்.டி. என்றாலே அய்யர் – அய்யங்கார் டெக்னாலஜி என்று கூறப்படுவது எத்தகைய உண்மை என்பது – இதுவரை தெரியாதவர்களும் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு சாட்சியாகும்.
நடத்தப்பட்டது நேரடியான இராமாயணமும் இல்லை. அய்.அய்.டி. நிர்வாகமோ எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும் போக்கில் நடந்துள்ளது.
அப்படியே இருந்தாலும் அதில் என்ன பெரிய குற்றம் இருக்கிறது? இந்தியாவில் ஒரு இராமாயணமா இருக்கிறது? நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் உண்டு. வங்காள இராமாயணத்தில் இராவணன் மகள் சீதை என்று வருகிறது.
நாடக உலகில் புகழ் பெற்ற ஆர்.எஸ்.மனோகர் நூற்றுக்கணக்கான மேடைகளில் அரங்கேற்றிய இலங்கேஸ்வரன் என்னும் நாடகத்திலும்கூட இராவணன் மகள் சீதை என்றுதான் வருகிறது.
‘இராமாயணமும் மகாபாரதமும் இந்தோ – ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். சிலைகள் உண்மை என்று நான் நம்பவே இல்லை. ‘பஞ்சதந்திரம்’ ‘அராபியன் நைட்’ முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து’’ என்று ஜவகர்லால் நேரு கூறவில்லையா? (‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76–77).
இராமன் சரயு நதியில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டான் என்றும், சீதை பூமி பிளந்து மாண்டாள் என்றும் தானே வால்மீகி இராமாயணம் கூறுகிறது. கடவுள் அவதாரங்களின் வாழ்க்கை தற்கொலையில் முடிந்ததைப் பற்றி மும்பை அய்.அய்.டி. நிறுவனம் என்ன கூறுகிறது?
‘சக்ரவர்த்தி திருமகன்’’ என்ற நூலை சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இராமனைப்பற்றி என்ன சொல்லுகிறார்?
க. சந்தானம் அய்யங்கார் ‘உத்தரராம சரித்திரம்’’ என்ற பெயரில் நாடகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்நூலுக்கு ராஜாஜி வழங்கிய முன்னுரை என்ன கூறுகிறது?
‘நானும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்த்தேன். சிறீராமன் உலகத்திற்கு வழிகாட்ட அவதரித்த கடவுள். சீதையை அரும்பாடுபட்டு இலங்கையிலிருந்து கொண்டு வந்தபின், ஊராரின் பேச்சைக் கேட்டு, சீதையைக் காட்டுக்கு அனுப்பிவிட்டார் என்ற கொடுஞ்செயலை என் மனதிற்குள் சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை’’ என்று எழுதினாரே!
(க. திருநாவுக்கரசு எழுதிய ‘திராவிட இயக்க இதழ்கள்’ பக்கம் 60)
‘சக்ரவர்த்தி திருமகன்’ என்று இராமனைக் கதாநாயகனாக முன்னிறுத்தி எழுதிய ராஜாஜியாலேயே ராமனைக் காப்பாற்ற முடியவில்லையே!
தந்தை பெரியாரின் ‘‘இராமாயணப் பாத்திரங்கள்’’ நூலை உ.பி. உயர்நீதிமன்றம் செல்லாது என்று சொன்னதைத் தடை செய்ததே உச்சநீதிமன்றம் (நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பு). உண்மை இவ்வாறு எல்லாம் இருக்க, இராமனை இழிவுபடுத்தியதாகக் கூறி மும்பை அய்.அய்.டி. நிறுவனம் மாணவர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம் விதித்தது சரியா? நடப்பது ராமராஜ்ஜியமா?