எழுத்துப்பிழை இல்லாமல் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லித் தர சில விளக்கங்கள்…

viduthalai
1 Min Read

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி “ன” ,
மூன்று சுழி “ண”, மற்றும் “ந” என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கில் ஒரே மாதிரி தோன்றும்.
“ண”, “ன” மற்றும் “ந” எங்கெல்லாம் வரும்?
மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
“ந” என்ன வித்தியாசம்?
ஒரு எளிய விளக்கம்.
“ண” – இதன் பெயர் டண்ணகரம்,
“ன” – இதன் பெயர் றன்னகரம்,
“ந” – இதன் பெயர் தந்நகரம்.
என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி “ண “கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து ‘ட’ வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும்.
இதனாலதான் இதுக்கு “டண்ணகரம்” னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி “ன” கர ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து ‘ற’ வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனாலதான் இதுக்கு “றன்னகரம்” னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)
இவை ரெண்டும் என்றுமே மாறி வராது என்பதை நினைவில் கொள்க..
மண்டபமா? மன்டபமா? எழுதும்போது சந்தேகம் வருகிறதா?
பக்கத்துல ‘ட’ இருப்பதால்,
இங்க மூன்று சுழி ‘ண’ தான் வரும்.
ஏன்னா அது “டண்ணகரம்”.
கொன்றானா? கொண்றானா? எழுதும்போது சந்தேகம் வருகிறதா?
பக்கத்துல ‘ற’ இருப்பதால்,
இங்க ரெண்டு சுழி ‘ன’ தான் வரும்.
ஏன்னா அது “றன்னகரம்”
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான் ‘ந’ கரம் என்பதை, “தந்நகரம்” னு சொல்லணும்.
ஏன்னா இந்த ‘ந’ எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் ‘த’ மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).
இந்த “ண”, “ன” மற்றும் “ந” விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த எளிமையான விளக்கம் இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்ததை
பலபேருக்கு பகிர்வோம்.

– சமூக வலைதளப் பதிவிலிருந்து…

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *