புயல்கள் தாக்கினாலும் பாதுகாக்கும் தொழில் நுட்பம் – அய்.அய்.டி., கண்டுபிடிப்பு!

2 Min Read

அரசியல்

சென்னை, ஆக.27  ஒரே நேரத்தில் 2 புயல்கள் இணைந்து வந்தால் தரைப்பகுதியை தாக்கினால் ஏற்படும் சேதத்தில் இருந்து தப்பும் தொழில் நுட்பம் மூலம் பொருள், உயிர் சேதம் தவிர்க்கப்படும் வகையில் சென்னை, அய்தராபாத் அய்.அய்.டி. ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சென்னை அய்.அய்.டி. விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் ஆர்.யு. சுஜித் கூறியதாவது: 

இயற்கையின் பெரிய சவால் களான புயல், மழை, பூகம்பம் உள்பட இயற்கை பேரழிவுகளை முன் கூட்டியே கணிப்பதன் மூலம் மனித உயிர்களை காப்பதுடன், பொருள் சேதம் போன்றவற்றை தவிர்ப்பதுடன், அசம்பாவித சம்ப வங்கள் நடப்பது தடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக புயல் தாக் கும்போது கடலோர மக்கள் பாது காப்பாக ஒரு இடத்தில் தங்க வைத்து மாநில அரசுகள், அவர் களின் உயிர்களை காப்பாற்றுவதை அடிக்கடி பார்க்கலாம். 

இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் இணைந்து வந்தால் அதனை கணிப்பதில் பெரும் அறிவியலுக்கே சவால் விடும் வகையில் இருக்கும். இதற்கு தீர்வை காணும் வகையில் சென்னை, அய்தராபாத் அய்.அய்.டி. ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை உரு வாக்கி சாதனை படைத்துள்ளனர். இதற்காக சென்னை, அய்தராபாத் அய்.அய்.டி. ஆராய்ச்சியாளர்கள், ஜெர்மனியின் ‘போட்ஸ்டாம் இன்ஸ்டிடியூட் ஆப் கிளைமேட் இம்பாக்ட் ரிசர்ச்’ ஆராய்ச்சியா ளர்கள் மழை, சூறாவளி, புயல் போன்றவற்றின் தரவுகளின் அடிப்படையில் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் பெயர் ‘புஜி வாரா தொடர்பு’ என ஆராய்ச்சி யாளர்கள் அழைக்கின்றனர். 

இந்த தொழில்நுட்பத்தை கொண்டு 2 சூறாவளி புயல் காற்று களுக்கு இடையேயான தொடர் புகளை ஆய்வு செய்ய பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் 2 புயல்களின் வெவ்வேறு நிலை களையும் புரிந்து கொள்ள முடியும் என்றும், அதன் ஆரம்ப குறிப்புகளை துல்லியமாக கணிக்க முடியும் என்றும், இதற்கு முன்பு வழக்கமான முறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களைவிட இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் கிடைக்கும் விவரங்கள் மிகவும் துல்லியமானவையாக இருக்கும் என்றும் அவர்கள் மேலும் கூறினர்.  

இந்த தொழில்நுட்பத்தால், பேரழிவுகளின் தாக்கத்தை முன் கூட்டியே அறிந்து அதனை குறைக்க தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க போதுமானதாக இருக்கும் என சென்னை அய்.அய்.டி. விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் ஆர்.யு.சுஜித் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *