கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

21.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 பேர் மரணம் – நீதி விசாரணைக்கு உத்தரவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை!
* “டார்க்நெட்டில் கசிந்த வினாத்தாள்’’.. யுஜிசி நெட் தேர்வு ரத்து ஏன்? பரபர தகவல்.. சிபிஅய் எப்அய்ஆர்
* தெலங்கானா அரசியல் கட்சிகளின் தலைமைப் பொறுப்புக்கு ஓபிசி, எஸ்.சி. தலைவர்களை நியமிக்க முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்த ஆண்டு மே 5 அன்று நடைபெற்ற நீட் இளங்கலைத் தேர்வின் பல தேர்வு மய்யங்களில் தேர்வு அறைகளில் கட்டாயம் செயல்படும் இரண்டு சிசிடிவிகள் இல்லை; வினாத்தாள்கள் பாதுகாக்கப்படும் அறைகள் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது என மதிப்பாய்வில் கண்டுபிடிப்பு.
* மோடியின் பாஜக அரசின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: சரத் பவார்
* கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், என்டிஏவை ரத்து செய்ய வேண்டும், சி.பி.எம். வலியுறுத்தல்
* நீட் முறைகேடு போராட்டம் வலுக்கிறது வினாத்தாள் கசிவுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் காரணம்: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு
*பிரதமர் மோடி உளவியல் ரீதியாக உடைந்து போயிருக்கிறார். ஆட்சியை நடத்த முடியவில்லை என ராகுல் விமர்சனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘நாங்கள் பொறுப்பேற்கிறோம்’: நீட், யுஜிசி-நெட் தேர்வில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க குழுவை கல்வி அமைச்சர் அறிவித்தார்.
* முதல் கோணல்: மூத்த உறுப்பினரை நியமிக்கும் முறையை உடைத்து, இடைக்கால மக்களவை தலைவராக பாஜகவின் பார்த்ருஹரி மஹ்தாப் நியமனம்.
* குஜராத் கடற்கரை போதைப்பொருள் மாபியா மய்யமாக உருவெடுத்துள்ளது; கைவிடப்பட்ட பாக்கெட்டுகளை எல்லையோர காவல் படை தொடர்ந்து மீட்டு வருகிறது
தி இந்து:
* பீகாரில் 65% இட ஒதுக்கீடு; பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து.
தி டெலிகிராப்:
* நீட்-2024: நான்கு விண்ணப்பதாரர்களுக்கான வினாத்தாள்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப் பட்டவர் ஒப்புக்கொண்டார்
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *