கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்

1 Min Read

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர்
மகேஷ்குமார் அகர்வால் பணியிடமாற்றம்

சென்னை ஜூன் 21 கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயஉயிரிழப்பு விவகாரம் எதிரொலியாக கள்ளச் சாராய உற்பத்தி, விற்பனை மற்றும் போதைப் பொருட்களை தடுக்கும் – கண்காணிக்கும் பிரிவான குற்றம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பை தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் கூடுதலாக கவனிப்பார்.

இதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையர் ஜி.கோபி, சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமாருக்கு பதில் நியமிக்கப்பட் டுள்ளார். மகேஷ்குமார் அகர்வால் மற்றும் செந்தில்குமார் இருவரும் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை செயலர் பி.அமுதா நேற்று (20.6.2024) பிறப்பித்தார்.

ஏற்கெனவே இவ்விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப் பட்டார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு  17 பேர் மரணம்

புதுடில்லி ஜூன் 21 டில்லி ஆா்.எம்.எல் மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடா்பான நோய்களால் 17 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் நேற்று (20.6.2024) தெரிவித்தனா்.

சப்தா்ஜங் மருத்துவமனையியில் வெப்பம் தொடா்பான நோய்களால் பாதிக்கப்பட்ட 33 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 13 போ் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனா் என்று மருத்துவமனையின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 22 நோயாளிகள் வெப்பப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 4 போ் உயிரிழந்துள்ளனா் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *