கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை, ஜூன் 21- கால்நடை மருத்துவப் படிப்புக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் நேற்று (20.6.2024) வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பிவிஎஸ்சி (கால்நடை மருத்துவம்) மற்றும் பிடெக் படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான இணைவழியில் விண்ணப்ப பதிவு ஜூன் 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி (நாளை) முடிவடைவதாக இருந்தது.

கடந்த 19ஆம் தேதி நிலவரப்படி, கால்நடை மருத்துவ படிப்பில் சேர 11,586 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேருவதற்கு 2,392 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந் நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, பிவிஎஸ்சி, பிடெக் படிப்பு களுக்கு இணையவழியில் விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 28ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் www.adm.tanuvas.ac.in என்ற

இணையதளத்தை பயன்படுத்தி உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *