சேலம், ஜூன் 20- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் “நீட்” : சமூக நீதியை சாகடிக்கும் கண்ணிவெடி அறிக்கையை (புத்தக வடிவில்) சேலத்தில் 19-6-2024 அன்று மதியம் 1.00 மணிக்கு, சேலம் மாவட்ட கழக சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு, மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டச் செயலாளர் சி. பூபதி, மாநகர் செயலாளர் அரங்க. இளவரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழர் தலைவர், சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம், மகளிர் அணி தோழியர் கமலம், வேப்பூர் இளங்கனி, வேப்பூர் வட்டச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடத்துநர்கள், ஓட்டுநர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி நீட் ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
சேலத்தில் ‘நீட்’ ஒழிப்பு பரப்புரை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books