சேலத்தில் ‘நீட்’ ஒழிப்பு பரப்புரை

Viduthalai
1 Min Read

சேலம், ஜூன் 20- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் “நீட்” : சமூக நீதியை சாகடிக்கும் கண்ணிவெடி அறிக்கையை (புத்தக வடிவில்) சேலத்தில் 19-6-2024 அன்று மதியம் 1.00 மணிக்கு, சேலம் மாவட்ட கழக சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு, மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டச் செயலாளர் சி. பூபதி, மாநகர் செயலாளர் அரங்க. இளவரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழர் தலைவர், சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம், மகளிர் அணி தோழியர் கமலம், வேப்பூர் இளங்கனி, வேப்பூர் வட்டச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடத்துநர்கள், ஓட்டுநர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி நீட் ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *