நிலவில் இறங்கிய சீனா

1 Min Read

நிலவை ஆராய்வதற்காகப் பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு விண்கலங்களை அனுப்பி வருகின்றன.சீனாவின் விண்வெளி ஆய்வு மய்யமான சிஎன்எஸ்ஏ (CNSA) 2019ஆம் ஆண்டு Chang’e- – 5 விண்கலத்தை நிலவில் தரை யிறக்கியது. இதைத் தொடர்ந்து உலக வரலாற்றில் முதன்முறையாக, இந்தியா நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்கியது.

சீனா Chang’e – 6 விண்கலத்தை மே 3ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இது மே 8ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. ஜூன் 2ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் உள்ள அபோலோ பேசின் (Apollo Basin) எனும் இடத்தில் திட்டமிடப்பட்டது போலவே தரையிறங்கியது. தென் பகுதியிலேயே இந்த இடம் தான் சமதளமாக இருப்பதால், இது தேர்ந்தெடுக்கப்பட்டதாக சிஎன்எஸ்ஏ தெரிவித்தது.

உரிய பகுதியில் இறங்கும் முன்னர் 100 மீட்டர் உயரத்தில் பறந்தபடி 3டி ஸ்கானிங் முறையில் போட்டோக்கள் எடுக்கப்பட்டன. இதன்மூலம் தரையிறங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரியவந்தது. இதற்குப் பின் செங்குத்தாக, மிக மெதுவாக விண்கலம் நிலவில் இறங்கியது.

இந்த விண்கலம் இதுவரை ஆராயப்படாத நிலவின் தென்பகுதியிலிருந்து 2 கிலோ மண்ணை ஆய்வுக்கு எடுத்து வர உள்ளது. நிலவின் நிலத்தைத் தோண்டுவதற்கு ஏதுவான இயந்திரக் கைகள் இந்த விண்கலத்தில் உள்ளன. ஜூன் 25ஆம் தேதி இது பூமிக்குத் திரும்பி வரும்படியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *