பகுத்தறிவாளர் ந.சி.இராசவேலு மறைவு வழக்குரைஞர் அ.அருள்மொழி இறுதி மரியாதை

1 Min Read

அரசியல்

சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளராகவும்,  கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய வட்டம் அமைப்பின் காப்பாளராகவும் இருந்த ந.சி. இராசவேலு (வயது 83) நேற்று (26.8.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பாரதிதாசன் குடியிருப்பில் பலமுறை பகுத்தறி வாளர்  கழகத்தின் சார்பாக புரட்சிக்கவிஞர் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியவர்.

 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது ஆழ்ந்த பற்றுடையவர். அவரது இறுதி நிகழ்வில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கலந்து கொண்டு மறைந்த தோழர் ராசவேலு அவர்களின் துணைவியார் ஜெயா அம்மையார், மகன்கள் அண்ணாதுரை, அன்பரசன், அரவிந் தன், கருணாநிதி, மகள் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு திரா விடர் கழகத்தின் சார்பில் – தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆறுதலைத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *