இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது! தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேர் கைது

Viduthalai
0 Min Read

ஒன்றிய பி.ஜே.பி. அரசு தூங்குகிறது

ரமேஸ்வரம், நவ. 19- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் காங்கேசன் துறை கடல் பகுதி அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்துள்ளனர். மேலும் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *