சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொலைப்பேசி வழியாக தமிழர் தலைவர் வாழ்த்து

0 Min Read

அரசியல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்தமையைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (28.8.2023) காலை தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் நடைபெறும் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் அவர்களுடன் பங்கேற்க வருகை தந்திருந்த அமைச்சர் பெருமக்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி, ஆர்.காந்தி ஆகியோரும் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொலைப்பேசி வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *