பெங்களூரு, ஜூன்19- கருநாடக மாநிலம் பெங்களூரு விஜய் நகர் இரண்டாம் பகுதி – ஹம்பி நகரில் வாழ்ந்த மாநிலக் கழக தென் மண்டலத் தலைவர் வீ.இரத்தினம் அகவை 93இல் தனது இல்லத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவால், அகவை மூப்பின் காரணமாக 16.6.2024 இரவு 1:30 மணிக்கு மறைவெய்தினார்.
அன்னாரின் உடல் அவரது விருப்பப்படி எவ்வித சடங்குகளின்றி குளிரூட்டப்பட்ட கண்ணாடி பெட்டியில் கருப்புடை அணிவித்து, கழகக் கொடியை மாநிலத் தலைவர் மு.சானகிராமன், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ உடல் மீது அணிவித்து வீர வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டின் கட லோரப் பகுதியான வேதாரண்யத்தில் பிறந்து, முதுகலை பட்டப் படிப்பும், வழக்குரைஞர் கல்வியும் பயின்று, பெங்களூருக்கு வருகைத் தந்து ஒன்றிய அரசின் உயர்துறையில் ஆடிட்டர் மற்றும் கணக்குப் பிரிவில் உயர் அலுவலராய் இருந்து பணி நிறைவு பெற்றார்.
இளமைக் காலம் தொட்டே தந்தை பெரியார் அவர்களின் மீதும், அவரது கொள் கைகளின் மீது ஈர்ப்பும் பற்றும் கொண்டு செயல் பட்டு வந்தார். கழகப் பணிகளில் திறம்பட செயல்பட்டு இறக்கும் தருவாய் வரையில், பெரியார் கொள்கைகளில் உறுதியுடன் கருஞ்சட்டை வீரராகவே வாழ்ந்து மறைந்தார்.
தந்தை பெரியாரைப் பற்றி இரண்டு கவிதை நூல்களும் 6 ஆங்கில நூல்களை தமிழில் மொழி யாக்கம் செய்து சிறப்புடன் இயற்றியுள்ளார். நல்ல உணர்ச்சி மிக்க பேச்சாளராக விளங் கினார். இறுதி நாள் வரை விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா வழங்கி யும், கழகப் பணிக்கு நன் கொடை வழங்கியும் ஊக்கமூட்டி வந்தார்.
மறைந்த வீ.இரத்தினம் அவர்களுக்கு புனிதவதி, திலகவதி என்ற இரு மகள் கள் உள்ளனர். இவர்கள் நல்ல நிலையில் வாழ்வியல் நடத்தி வருகின்றனர்.
கருநாடக மாநில திராவிடர் கழக துணைத் தலைவர்களான வீ.மு.வேலு (104 அகவை), பு.ர.கஜபதி, அவரின் இணையர் செயலட்சுமி, கோரமங்களா பகுதி செயலர் மு.அரங்கநாதன், தென் மண்டல செயலாளர் புலவர் கி.சு.இளங்கோவன், வடமண்டல செயலர் சி.வரதராசன், மகள்கள் புனிதவதி, திலகவதி, மருமகன் பூபதி, பேரன் சித்து மற்றும் ஏராளமான உறவினர்களும் நண்பர் களும் திரளாக கலந்து கொண்டு இறுதி மரியா தையை அன்னாரின் உடலுக்கு செலுத்தினர்.
கழக முறைப்படி எவ்வித சடங்குகளுமின்றி கூட சும்மனஹள்ளி எரி யூட்டு மேடையில் எரியூட் டப்பட்டது.