விசைப் படகுகளுக்கு எண்ணெய் அளவை உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ. 19-  தமிழ்நாடு மீன்வளத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப் படகுகளுக்கு வழங்கப் படும் வரிவிலக்களிக்கப்பட்ட அதி வேக டீசல் எரிஎண்ணெய் அர சால் வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே டீசல் எரி எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மீன் பிடித் தொழில் லாபகரமானதாக இல்லை என்பதால், தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் எரிஎண்ணெய் அளவை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. 

இதையொட்டி கடந்த 18.8.2023 அன்று ராமநாதபுரத்தில் நடை பெற்ற மீனவர் நல மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், மீனவ சங்கங்களின் கோரிக் கையை ஏற்று மீன்பிடி விசைப் படகுகளுக்கு வழங்கப்படும்.

அதிவேக டீசல் எரிஎண்ணெய் அளவைபடகு ஒன்றுக்கு ஆண் டுக்கு 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4,400 லிட்டர் வீதமும் உயர்த்தி வழங்கப் படும் என்று அறிவித்தார். 

அதைத்தொடர்ந்து முதல மைச்சரின் அறிவிப்பை 2024-2025ஆ-ம் ஆண்டு முதல் செயல் படுத்தும் விதமாக மீன்வளத்துறை சார்பில் 17.11.2023 அன்று அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்மூலம் 4,500 விசைப் படகு மீனவர்களும், 13,200 நாட் டுப்படகு மீனவர்களும் பயன் பெறவுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *