ஜாதி வெறியர்களை கண்டித்து பாளையங்கோட்டையில் அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

1 Min Read

கழகத் தோழர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி, ஜூன் 18- ஜாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலு வலகத்தையும்,தோழர்களையும் தாக்கிய ஜாதி வெறியர்கள் கண்டித்து 17.6.2024 அன்று மாலை6 மணிக்கு பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலையருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிறீராம் வரவேற்றார்.

மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தொடக்கவுரையாற்றினார். திமுக தொழிற்சங்கத்தலைவர் தர்மன், மதிமுக, மாவட்டச் செயலாளர் நிஜாம், காங்கிரஸ்மாவட்டத்தலைவர் சங்கரபாண்டியன், சிபிஅய் மாவட்டச்செயலாளர் சடையப்பன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன், திராவிட தமிழர் கட்சி மாநிலத்தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் ஆகியோர் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தல்படி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தே.பாலகிருட்டிணன் கண்டன உரை நிகழ்த்தினார்.
திராவிடர் கழக மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி, மாநில திராவிட மாணவர் கழக துணைச்செயலாளர் சு.இனியன், மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகரன், பாளை பகுதி செயலாளர் பா.பாலகிருட்டிணன், தச்சை பகுதிசெயலாளர் மாரிகணேசு, மாநகர ப.க.துணைச்செயலாளர் சந்திப்பு நடராசன், ப.க.செயற்குழுஉறுப்பினர் சந்தர்ராசு, மாவட்ட திராவிட மாணவர்கழக தலைவர் செ.சூரியா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அயன்சிங்கம்பட்டி எஸ்.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று முழக்கமிட்டார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *