இந்திய சுகாதார சேவை வழங்குநர் சங்கம் வழங்கி கவுரவிப்பு
தாம்பரம், ஜூன் 18- குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரேலா, உலகில் மகத்தான சாதனை நிகழ்த்திய கல்லீரல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை, சிக்கலான கல்லீரல்-கணைய அறுவை சிகிச்சை மற்றும் பிற தலைப்புகளில் 400க்கும் அதிகமான அறிவியல் கட்டுரைகளையும், ஆய்வு முடிவுகளையும் இவர் எழுதி பிரசுரித்திருக்கிறார்.
இதுவரை 6000க்கும் அதிகமான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை களை ரேலா வெற்றிகரமாக செய்திருக்கிறார்.
பிறந்து 5 நாட் களே ஆன ஒரு பச்சி ளம் குழந்தைக்கு செய்யப் பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சையும் இதில் உள்ளடங்கும். இச்சாத னையின் மூலம் கின்னஸ் சாதனை பதிவேட்டில் இவர் இடம் பெற்றிருக்கிறார்.
இந்திய கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை சங்கத்தின் தலைவராக திறம்பட செயல்பட்டு வரும் அவர், கவுன்சில் ஆப் தி டிரான்ஸ்பிளன்டேஷன் சொசைட்டியின் தெற்கு / தென்கிழக்கு ஆசியாவிற்கான பொது ஆலோசகராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் 28 ஆண்டு களுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டி ருக்கும் சிறப்பு நிபுணரான ரேலா, 2009ஆம் ஆண்டில் சென்னையில் கல்லீரல் நோய் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சைக்கென மய்யத்தை தொடங்கினார்.
அதன்பிறகு மிக விரைவிலேயே, இந் தியாவில் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான மிகப்பெரிய செயல்திட்ட அமைவிடமாக இது உருவெடுத்தது.
அதைத்தொடர்ந்து மாறுபட்ட பாதிப்புகளை கொண்ட நோயாளிகளது சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது என்ற குறிக்கோளுடன் ரேலா மருத்துவமனையை இவர் தொடங்கினார்.
பன்னாட்டு அளவி லான மருத்துவ மய்ய மாகவும் மற்றும் நான் காம் நிலை உயர் பராமரிப்பை வழங்கும் மருத்துவமனையாகவும் இது இயங்கி வருகிறது.
இந்நிலையில் ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும் மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற ஒரு முன்னோடியுமான முகமது ரேலாவுக்கு ஏஎச்பிஅய்சிஓஎன் 2024 என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.