சென்னை, ஜூன் 18- குற்ற வழக்குகள், சிறை சென்ற விவரம் என ரவுடிகளை கண்காணிக்கும் ‘பருந்து செயலி’ சென்னை காவல் துறையில் உள்ளது. இந்த செயலி தமிழ்நாடு முழுவதும் விரைவில் அறிமுகம் செய்யப் பட உள்ளது.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனி னும், கடந்த 2020இல் 64, 2021இல் 89, 2022இல் 93 ஆதாயக் கொலைகள் நடை பெற்றுள்ளன.
இதுபோக இதே ஆண்டு களில் தலா 1,597 கொலைகளும் நடைபெற்றுள்ளது. இதே போல் கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல், நம்பிக்கை மோசடி உட்பட 26 வகையான குற்றங்கள் தொடர்பாக 2020இல் 8 லட்சத்து 91,696, 2021இல் 3 லட்சத்து 22,846, 2022இல் 1 லட்சத்து 94,097 குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக வழக்கு கள் பதிவாகி உள்ளது.
குற்றச் செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவ்வப்போது ரவுடிகள் விவரம் சேகரிக்கப் பட்டு வருகிறது. அதன்படி, 2012ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர். ரவுடிகளை ஒழிக்க, அவர்களை ஏ, ஏ பிளஸ், பி, பி பிளஸ் என பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து அவர் கள் மீது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. மேலும், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை யில் அடைக்கப்பட்டு வரு கின்றனர்.
இந்நிலையில், ரவுடி கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், பிணையில் வெளியே வந்த கொலைக் குற்றவாளிகளை கண்கா ணிக்க ‘பருந்து’ என்ற செய லியை தமிழ்நாடு காவல் துறை அறிமுகம் செய்தது. முதல் கட்டமாக சென்னை பெருநகர காவலில் இந்த செயலி கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா வடிவ மைத்திருந்தார்.
காவல் நிலையங்களில் ரவுடிப் பட்டியலில் இருப்ப வர்கள், அவர்களின் தற்போ தைய நிலை, அவர்களின் குற்றச் செயல்கள் விவரம், அவர்கள் மீது உள்ள வழக்கு விவரங்கள், அவரது எதிர் தரப்பினர், கூட்டாளிகள், சிறையில் இருக்கிறாரா? வெளியே இருக்கிறாரா, அவரது பகுதியிலேயே வசிக்கிறாரா? வேறு எங்கேனும் இடம் பெயர்ந்து விட்டாரா? உட்பட ரவுடிகளின் அனைத்து விவ ரங்களும் நாள்தோறும் கண்காணித்து பருந்து செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இது சென்னை காவல் துறையினருக்கு பெரிதும் உதவி வருகிறது. இதையடுத்து இச் செயலியை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
காவல் ஆணையர் எச்சரிக்கை: பருந்து செயலியில் ரவுடிகளின் நட வடிக்கைகள் நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு பதி வேற்றம் செய்யப்படும். அதை உயர் அதிகாரிகள் கண்காணித்து அது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
அதை அடிப்படையாக வைத்து காவல் ஆய்வாளர் முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க வேண்டும். இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கடந்த வாரம் சென்னை கொருக்குப் பேட்டையில் தினேஷ் என்ற ரவுடி எதிர் தரப்பு ரவுடிகளால் கொலை செய் யப்பட்டார்.
இதையடுத்து அலட்சிய மாகவும், மெத்தனமாகவும் செயல்பட்டதாக கொருக்குப் பேட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் யுவராஜை பணி யிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை தொடரும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தி உள்ளார்.