சென்னை, ஜூன் 18- தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் லண்டன் சென்று பயிற்சி பெற்ற 25 மாணவ – மாண வியர் நேற்று (17.6.2024) சென்னை திரும்பினர்.தமிழ்நாடு முதலமைச்ச ரின் கனவுத் திட்டமான, ‘நான் முதல்வன்’ திட் டத்தின் கீழ் மாணவ – மாணவியரின் தனித் திறன்களை கண்டறிந்து, அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்புக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற் போது, லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.
பிரிட்டிஷ் கவுன்சிலு டன், தமிழ்நாடு திறன் மேம் பாட்டு கழகம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்காக, கல்லூரிகள் மூலம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை திறன் மேம்பாட்டுக்கழகம் பெற்றது. அப்போது பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் பெற்ற 1,267 மாணவ- மாணவியர் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கு பல திறனாய்வு தேர்வுகளை நடத்தி, அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், அந்த 100 பேருக்கும் இணைய வழி மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவ – மாணவியர் லண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கடந்த 9ஆம் தேதி அதிகாலை அந்த மாணவ – மாணவியர் சென்னையில் இருந்து லண்டன் அழைத்துச் செல் லப்பட்டனர். அவர்களுடன் பேராசிரியர்கள் இருவரும் லண்டன் சென்றனர். கடந்த 16ஆம் தேதி வரை மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பயிற் சியை நிறைவு செய்த 25 பேரும் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மூலம் இன்று சென்னை திரும் பினர். சென்னை விமான நிலையத்தில் மாணவ – மாணவியரை அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் வரவேற்றனர்.
சென்னை திரும்பிய மாணவர்கள் கூறுகையில், “நான் முதல்வன், திட்டத் தின் மூலம் இணைந்து பயிற்சிகள் பெற்றதன் மூலம், வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப் புக் கிடைத்தது. ‘நான் முதல் வன்’ திட்டத்தின் மூலம் வெளிநாடு சென்றது புது அனுபவமாக இருந்தது.
முதல் முறையாக விமானத்தில் சென்றோம். இந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.